நீண்ட தூக்கம்
விழித்து எழுந்தபோது
நீ என்னருகில்…
நிஜம் தானா
என்று
தொட்டுப் பார்த்தேன்…
உடனே
கலைந்து விட்டாய்…
என் கனவையும் சேர்த்து…
நேற்று தரை இறங்கிய
விமானத்தில்
இன்னும்
நான்
பயணிக்கிறேன்…
நீ
இல்லா
வெறுமையை
விலக்கிக் கொள்ள…
ஏ கண்ணாடி மலரே
நேற்று
நீ
பேசிய வார்த்தையெல்லாம்
எழுத்துக்களாய்
மாறி
நான்
உன்னை சுற்றுவது போல்
என்னை
சுற்றிக் கொண்டிருக்கின்றன…
அடுத்த பயணத்தில்
நிச்சயம்
என் காதலை
சொல்வேன்…
நீ அருகில் இல்லாவிட்டால்…


