அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

19 Jul

இனியதமிழில்…திட்ட வார்த்தை இல்லை…

Posted in அனுபவம், கட்டுரை, தமிழகம் on 19.07.10

ambulance

108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை! – இது செய்தி

இதை போன்று ஒரு செய்தி வருகிறது என்றால் அந்த வக்கிரம் நிறைந்த மனவளர்ச்சி குன்றிய மனிதர்களை பற்றி என்ன சொல்ல…உயிர் காக்கும் கடமையை செய்கிற ஒரு உன்னதமான சேவையை இப்படி பொய் தகவல் கொடுக்க எப்படி தான் மனம் வருகிறதோ…நான் நேசிக்கும் தமிழில் திட்ட மனம் வரவில்லை…ஆனால் என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

உபயோகம் இல்லாவிட்டாலும் உபத்திரம் கொடுக்ககூடாது என்பது சிறு வயதில் இருந்து பெற்றோர்களாலும் மற்றும் பெரியவர்களாலும் நமக்கு சொல்லப்பட்ட மந்திரம்…அந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு இது சொல்லித் தரப்படவில்லையா…

நமது அரசாங்கங்கள் நல்லது செய்வதே பெரிய விடயம் அதையும் இப்படி சோதிக்க எண்ணுபவர்களுக்கு என்ன வகையான மனதை இயற்கை படைத்திருக்கும்.

தவறு என்பது தெரிந்து செய்வது…இந்த அரைகுறை மனிதர்களை காவல்துறை அடையாளம் காணவேண்டும்…குடிநீருக்காக…சாலை மறியல் செய்பவர்களை காட்டுமிரண்டிகளாய் அடிப்பதை விட இவர்களை போன்ற மனிதர்களை அடையாளம் காட்டுவதே சமுகத்திற்கு செய்யும் நன்மையாகும்.

( பின்குறிப்பு: இனியதமிழ் திரட்டிக்கும் இந்த தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது )


tags: , ,

View Comments

  • ஆர்.கே.சதீஸ்குமார்

    பொய் தகவல் மட்டுமல்ல..குடி போதையில் கீழே விழுந்து சிராய்ப்பு காயம் பெற்றவர்களும் போன் செய்து இம்சை செய்கிறார்களாம்

  • http://enthamizh.blogspot.com ஸ்ரீ….

    முக்கியமான ஆதங்கத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். இம்மாதிரி மனவளம் குன்றியவர்கள் சமூகத்தில் ஏராளம்.

    ஸ்ரீ….

  • http://bluehillstree.blogspot.com அஹமது இர்ஷாத்

    நாம ஆதங்கம் மட்டும்தான் படமுடியும்..

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker