தஞ்சை மாவட்டத்தில் கதை களம் அமைத்த இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும்…அசல் தமிழ் படத்திற்கு இருக்கும் அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது…
இயல்பான நடிப்பால் விமல் அசத்துகிறார்…அவர் செய்யும் ஒவ்வொரு களவாணித்தனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது…ஓவியா பற்றி சொல்லவேண்டுமானால் கொஞ்சம் ஏமாற்றமே.. இன்னும் சற்று நன்றாக நடித்து இருக்கலாம் ஆனால் அழகாக இருக்கிறார்… காட்சிக்கு அழகு சேர்க்கிறார்.

விமல் “கஞ்சா கருப்பை” வைத்து செய்யும் குறும்புத்தனங்கள் சிரித்து சிரித்து வயிறு வலித்துவிடும் வகை…
வில்லன் நடிகர் நல்ல தேர்வு ஆனால் இந்த படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் கொடுத்த அழுத்தம் போக போக குறைந்து வீணாக்கப்பட்டு இருக்கிறது…காதாநாயகனுக்கும் அதே நிலை தான்…
ஒளிப்பதிவு அருமை…இசை…பாடல்…இருக்கிறதா என்ன இந்த படத்தில்…அங்கங்கு வரும் கிராமிய பாடலை தவிர…அந்த பாடலை பாடியவரின் குரல் மனதை தொடுகிறது…
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தூர தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு கண்டிப்பாய் இந்தப் படம் ஊருக்கு சென்றுவந்த திருப்தியை கொடுக்கும்…
எனது விடுமுறை நாளை நல்ல படம் பார்த்து கழித்த திருப்தியை இந்த படம் எனக்கு தந்தது…


