உன் அருகாமை இன்றி…
திறக்காத கதவு
வழியே
வருகின்ற காற்றைப்
போல
உன்
இடைப் பிடித்து
தழுவிய
தருணங்கள்
நினைவுகளின்
ஊடாக
வழியேடுத்து
வந்து
வருத்துகிறது…
நீ
கட்டிய
புடவையும்
காய்ந்து
விழுந்த
காதோர
ரோசாப் பூவும்
உன்
அருகாமை
இன்றி
வதங்கிக் கிடக்கின்றன…
மஞ்சள் மலரே!
நீ
நடந்து வர…
உன்
பாதையெங்கும்
என்
கவிதைகள்
கால் கடுக்க
காத்திருக்கும்….
உன்
கோபம்
அவை அறியா…
தமிழின்
வல்லினத்தை
பயன்படுத்தி
அவைகளை வையாதே…
உன்
கோப வசவுக்காய்
முற்றத்தில்
நான் இருப்பேன்…
என் காதலியே…
Comments
-
http://mathinilaa.blogspot.com nilaamathy
-
http://mathinilaa.blogspot.com nilaamathy
-
http://saravanakumarpages.blogspot.com செ.சரவணக்குமார்
-
http://saravanakumarpages.blogspot.com செ.சரவணக்குமார்




