நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமாக வந்த பல நண்பர்களின் கருத்துகள்…கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறி ஆக்கும் வண்ணம் உள்ளது…முதலமைச்சர்,எதிர் கட்சி தலைவர்…யாராக இருந்தாலும் மக்கள் மறுத்தால் நாளை நடுத்தெருவில் தான் அவர்கள் அதிகாரமும், மரியாதையும்… நான் மிக கவனமுடன் எழுதிய பதிவு அது தனி நபர் தாக்குதல் இன்றி அவர்கள் செய்யும் செயல்களை மட்டும் தான் விமர்சித்திருந்தேன்…
தாக்குதல் தொடுக்கப்பட்ட பதிவுகள்….
ஜெ – தேர்தல் – முதல்வர்
மாண்புமிகு முதல்வர் அவர்களே எப்போது திருந்துவீர்
இட ஒதுக்கீடு…ஓட்டு போடுங்க சாமி
கணினி பயன்பாடு தெரிந்தவர்…பின்னூட்டமிடுகிறார்..என்றால்…படித்தும் இவர்கள் சிந்திக்க மறுப்பது ஏன்?
என் எழுத்துகள் யார் மிரட்டினாலும்…தலை வணங்கி போகாது என்பதை இந்த பதிவின் மூலம் என் எழுத்துகளை எதிரியாக நினைக்கும் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்…
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
-தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.
( பி.கு – வந்த பின்னூட்டங்களின் தரம் கருதி மட்டறுத்துவிட்டேன். )


