
நீட்டிய கைகளை
மடக்கினாய்
உன் இனிய பொழுதுகள்
என்னுள் பிரவாகம் எடுத்தது…
நேரம் போகாத நிமிடங்கள்
உன் நேசத்தில்
கரைகிறது.
மலர்ந்தும் மலராததுமாக
அந்த ஒரு நொடியில்
பூவாய் பூக்கிறாய்…
உன் விழி திறந்து
காதல் வெப்பம்
நீக்கமற பரப்புகிறாய்…
தத்தி நீந்தும்
மீன் குஞ்சாய்
என் இமையில்
வழுக்கி
மனதில் நீந்துகிறாய்…

