தன்னம்பிக்கை கை கொடுக்கும்…

என் நிழலை சுற்றி
ஒரு கருவலயம்…
என் கனவை சுற்றி
ஒரு கருமேகம்…
எதிர்ப்பில்லாமல்
வாழ்கை இல்லை…
அளந்து வாழ
வாழ்கை…
ஒரு
அவலமா…என்ன!
திறக்காத மனதைக் கொண்டு…
வடித்து வைக்கும்
ஓவியங்கள்
மனிதர்களாய் இங்கே…
பாதையோரம்
மக்காமல்
கிடக்கும் பாலித்தீன் பைகளே…
திறன்கள் மறைந்து கிடக்கும்…
திட்டியவனை மறந்து விடுங்கள்…
ஒரு நாள்
வழி நெடுக
பூ சொறிவார்…திட்டியவனும்
புன்னகைப்பான்…
கை பிடித்து எழுந்திடுகள்…
உங்கள்
தன்னம்பிக்கை
கை கொடுக்கும்…
Comments
-
http://janavin.blogspot.com Jana
-
http://janavin.blogspot.com Jana


