அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

11 Aug

தென்றல் துவைத்த என் மனம்…

Posted in இயற்கை, கவிதை on 11.08.10


குறுக்கும் நெடுக்குமாய்
மரக்கிளைகள்…

இயற்கை வாரி
இறைத்திருந்த
சருகுகள்… என் கால்தடம் எங்கும்…

உடலோடு உறவாடிய
மாலை நேர
மலைக்காற்று…

மலை முகடுகளில்
வெட்கத்தால்
முகம் பதுக்கிய
இளஞ்சிவப்பு கதிரவன்…

இயற்கை விரித்த
மாயக் கம்பளம்…
பிடியில்லாமல்
என் மனம்
ஊஞ்சள் ஆடியது…

என் உணர்வுகளின்
ஆழ்ந்த இறுக்கம்
சிறிது சிறிதாக விலகியது…

தென்றல் துவைத்த
என் மனதில் தான்
எவ்வளவு அழுக்குகள்…

மனம் குளித்து
உடல் சிலிர்த்து
நிமிடங்கள் வசமாகின…

புது உடல்
புது மனம்
பெயரோடு அடையளாம்
மட்டும் மாறவில்லை…

இனி
தினம் வருவேன்
என்னை புதுப்பிக்க…
மாலை நேர வெளிக்காடே…


tags: ,

View Comments

  • http://www.krpsenthil.blogspot.com krpsenthil

    இதமான வரிகள்…

  • http://www.krpsenthil.blogspot.com krpsenthil

    இதமான வரிகள்…

  • ராசாராசாசோழன்

    நன்றி KRP…

  • ராசாராசாசோழன்

    நன்றி KRP…

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker