ஷங்கர்,ரஜினி,ஏ.ஆர். ரகுமான்,கலாநிதிமாறன் – இவர்களின் கூட்டணி என்பதே முழுக்க முழுக்க திரைப்பட வியாபாரத்தை சார்ந்தது…விமர்சனம் செய்யவேண்டும் என்று நினைத்தால் எந்திரன் படத்தை தான் விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர…இவர்களை பற்றி அல்ல…
இவர்கள் யாரும் தங்களை காந்தி என்று சொல்லிக் கொள்ளவில்லை…இவர்களின் பங்கு அரசியலை பொறுத்தவரை சுழியம் தான்… என்ன தான் பிரமாண்டமாக படம் எடுத்தாலும் சமூகத்தில் உள்ள சில குறைகளை முக்கிய விசயமாக கையாளுவதால் ஷங்கரை நாம் சமூக சீர்திருத்தவாதியாக நினைத்தால் அது நம் அறியாமையே…
சில பதிவர்கள் எழுதுவது போல் இவர்கள் நினைத்தால் நல்ல விசயங்கள் நிறைய செய்யலாம்…அது அவர்களின் மனநிலையை பொறுத்தது…நாம் யார் அவர்களை நிர்பந்திக்க…
இவர்கள் தான் தமிழ் திரைபடத்தை உலகமறிய செய்திருக்கிறார்கள்…தமிழ் திரைப்படங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்திருக்கிறார்கள்…அவர்கள் தொழிலில் தங்கள் திறமை மூலம் சாதித்திருக்கிறார்கள்…அதை நாம் பாராட்ட வேண்டுமே தவிர…சம்பந்தமில்ல அளவுகோலில் அவர்களை அளக்க முயற்சிப்பது…வீண் வேலை.
நான் இங்கு எந்த புதிய பிரச்சனையையும் கிளப்ப தயாராய் இல்லை…இந்த பதிவு முழுக்க முழுக்க என் கண்ணோட்டமே… நான் யாருக்கும் அறிவுரை சொல்லவில்லை… குடிகாரர்களையும் எந்திரன் படம் பார்க்க போகிறவர்களையும் ஒரே தட்டில் வைப்பது நல்ல நகைச்சுவை… தயவு செய்து எழுதிய பதிவர் சிந்தித்து எழுதவேண்டும்…


