அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

17 Aug

இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….

Posted in அரசியல், ஈழம், தமிழகம், மனிதாபிமானம் on 17.08.10

பேச்சுவார்த்தைக்காக தமிழகம் கிளம்பியது இலங்கை மீனவர் குழு

இந்த செய்தியை படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது… பிரச்சனை எப்போதுமே இரு இனத்திற்கு தானே தவிர…மீனவர்களுக்குள் இல்லை. இன்று அவர்கள் கை ஓங்கி இருப்பதால் ஒரு சில சிங்கள மீனவர்கள் தவறி நடக்கலாம். இலங்கை கடற்படையினர் நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களை திசை திருப்ப நடைபெறும் இது போன்ற பேச்சு வார்த்தைகள் எந்த வித பயனையும் அளிக்க போவது இல்லை.

தமிழக தமிழனுக்கே பாதுகாப்பு தர சிறிதும் எண்ணமில்லாத மாநில…மத்திய அரசுகளின் நிலைப்பாட்டை எங்கு போய் சொல்வது…அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றபின் நாம் கேட்கும் எல்லா கேள்விக்கும் அவர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போவோம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, இதை எழுதும் போது குறிஞ்சிப் பூவை பற்றி ஞாபகம் வருகிறது அதன் பன்னிரெண்டு வருட கர்ப்பக்காலம் அதன் மதிப்பை உயர்த்தியது….நாம் போடும் ஐந்து வருட ஓட்டோ நம்மை நடுத் தெருவிற்கு தான் அழைத்து வருகிறது.

எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கும் நம் அரசு மீனவர்களின் பாதுகாப்பையும் இலவசமாக கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்…

சற்று யோசித்து பார்த்தால் எவ்வளவு பிரச்சனைகளை மீனவர்கள் எதிர்கொள்கிறார்கள்…

அவர்களுக்குள்ளேயே முதலில் ஒற்றுமை கிடையாது…கடற்கரையை பங்கு போட்டு அடித்து கொள்கிறார்கள்…
கடலில் கொஞ்சம் உள்ளே சென்றால் கூட சிங்களவன் நாயை துரத்துவது போல் துரத்துகிறேன்…இப்போது சீனனும் இருப்பதாக சொல்கிறார்கள்…
இந்தியனிடம்(மாநில,மத்திய அரசு) சொன்னால் “நீ ஏன் கோட்டை தாண்டினாய் என்கிறான்…
இந்திய கடலோர காவல் படை ராஜபக்சேவுக்காக இரவும் பகலும் இல்லாத விடுதலைபுலிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்…கண்ணில் மாட்டும் அப்பாவி மீனவர்களை மிரட்டும் அளவிற்கு தைரியசாலிகள் அவர்கள்…

இன்னும் எவ்வளவோ….

மீனவர்களுக்காக நமது திராவிட கழகங்கள் மாறி மாறி நடத்தும் ஆர்பாட்டங்கள் கட்சி தொண்டர்களின் ஒரு நாள் பிரியாணியோடு முடிந்துவிடும்…அவர்களின் முழக்கங்கள் காற்றில் கரைவதற்குள் அனைவரும் வீடு போய் சேர்த்திருப்பார்கள்…

இன்று நேற்றல்ல…இந்த நாடகங்கள்….பல வருடங்கள் அரங்கேறுகின்றன… சளைக்காமல் எப்படி தான் நடத்துகிறார்களோ..

வெள்ளையனிடம் இருந்து வாங்கிய சுதந்திரம்….நம்மவனின் அதிகார போதையில் தள்ளாடுகிறது… மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு பெரிது…தமிழனாய் இருப்பதால்…அந்த மீனவர்கள் படும் தொல்லை சற்று அதிகம் தான்…


tags: , , , ,

View Comments

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker