
மின்னும் நட்சத்திரங்கள்…
அலை அலையாய்
நிலவொளி…
இடம் பிரித்து
வழிதேடி
என் கால்தடங்கள்…
இறுமாப்பை
கேள்வி கேட்கும்
ஒரு இரவில்…
நீண்டு ஓடிய
மரக்கிளைகள்
நச்சு பாம்புகளாய்…
என் நிழலே
உயர பூதங்களாய்…
சவாலான ஒரு பயணம்…
இரவில்… கடந்து போன
பாதையினை…
கதிரவனை துணைக்கழைத்து
பார்வையிட்டேன்…
என்ன அதிசயம்…
நான் கண்ட எதுவும் அங்கில்லை…
சிரிக்காதீர்…சிந்திப்பீர்…

