அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

20 Aug

ஓட்டு விழவில்லை…எழுதமாட்டேன்…

Posted in அனுபவம், பதிவுலகம் on 20.08.10

அண்மையில் ஒரு பதிவரின் பதிவை படித்த போது அதிர்ந்துவிட்டேன். அவரின் பல பதிவுகள் களவாடப்பட்டு வேறு வேறு தளங்களில் பிரபலமாக்கப்பட்டு இருந்தது…அவர் அதை குறையாக சொல்லி மேலும் அவரின் பல நல்ல பதிவுகளுக்கு சரியான ஓட்டு விழவில்லை என்று பெரிய குறையாக எழுதி இருந்தார்…

அடுத்தவரின் உழைப்பை இப்படி தன் படைப்பாக போடுவது மிக மிக கேவலமான ஒரு விஷயம்…இப்படி செய்து தான் பதிவுலகில் நிற்க முடியும் என்று அவர்கள் நினைத்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பதிவுலகில் இன்று இருக்கும் வலுவான போட்டியில் பிரபல பதிவர்களே சற்று தடுமாறும் பொழுது வளர்ந்து வரும் பதிவர்கள் சற்று நிதானமாக செயல்படவேண்டும்.

பதிவுலகம் என்பது மட்டைபந்து விளையாட்டை ஒத்து இருக்கிறது…இங்கு நிலையாக நிற்கவேண்டும் என்றால் பொறுமை மிக மிக தேவை…. என்ன தான் பிரபல பதிவராக இருந்தாலும் நண்பர்கள் ஒத்துழைத்தாலும் பதிவிற்கு பதிவு வித்தியாசத்தை காட்டவில்லை என்றால் நிலைத்து நிற்பது சுலபமில்லை.

ஓட்டு விழவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்…நண்பரே ஓட்டு விழுவதை எல்லாம் கணக்கில் கொண்டால் அது சிறுபிள்ளைத்தனமாகத்தான் முடியும். என்னுடைய பல பதிவுகள் மூன்று ஓட்டுகளை தாண்டியதில்லை…ஆனால் அன்று தான் அதிகம் பேர் படித்து இருப்பார்கள். படிக்கும் எல்லோருமே ஓட்டு போடவேண்டும் என்று ஒரு பதிவர் நினைப்பது எப்படி சரியாக இருக்கும்.

இதில் உச்ச கட்ட சோகம் என்னவென்றால் அந்த பதிவர் எழுதுவதை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். அவரின் பல பதிவுகள் தொழில்நுட்ப பதிவுகள்… அனைத்தும் தேவையான பதிவுகள்…ஓட்டு விழவில்லை என்ற காரணத்திற்காக அவர் எழுதவதை நிறுத்துவதாக அறிவித்தது அவரின் அறியாமையா அல்லது அந்த அளவிற்கு பக்குவம் பெறவில்லையா பதிவுலகில் என்று தெரியவில்லை.

எழுத முடிந்தால்…எழுதுவதில் தீராத தாகம் இருந்தால் பதிவுலகில் எழுதுங்கள் மற்ற எந்த காரணங்களுக்காகவும் எழுதாதீர்கள்…


tags: ,

View Comments

  • Srikrishnajayanth

    உண்மை தான் தோழரே… ஒரு நல்ல படைப்பு என்பது .. ஓட்டுகளால் நிர்ணயிக்கப் படுவதல்ல.. அதில் நாம் சொல்லப்பட்டிரிருக்கும் செய்தியையோ, தகவலையோ பொறுத்து தான் இருக்கிறது… சிறந்த படைப்புகள் மக்களை சென்றடைந்தாலே அது பிரபலமானது எனலாம்…

  • Aayiraththiloruvan

    எழுதுவதில் தீராத தாகம் இருந்தால் பதிவுலகில் எழுதுங்கள் மற்ற எந்த காரணங்களுக்காகவும் எழுதாதீர்கள்… உண்மையான வார்த்த்தைகள் நல்ல பதிவு

  • Vazhippokkann-Yogesh

    //
    எழுதுவதில் தீராத தாகம் இருந்தால் பதிவுலகில் எழுதுங்கள் மற்ற எந்த காரணங்களுக்காகவும் எழுதாதீர்கள்
    //

    சரியா சொல்லி இருக்கீங்க…

  • http://uravukaaran.blogspot.com உங்க உறவுகாரன் அப்பு!

    நண்பரே! சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்!

    ///பதிவுலகம் என்பது மட்டைபந்து விளையாட்டை ஒத்து இருக்கிறது…இங்கு நிலையாக நிற்கவேண்டும் என்றால் பொறுமை மிக மிக தேவை…. என்ன தான் பிரபல பதிவராக இருந்தாலும் நண்பர்கள் ஒத்துழைத்தாலும் பதிவிற்கு பதிவு வித்தியாசத்தை காட்டவில்லை என்றால் நிலைத்து நிற்பது சுலபமில்லை.///

    மிகவும் அருமை. என்னை போன்று புதிதாக எழுத வந்திருப்போருக்கு இது டானிக்காக இருக்கிறது.

    நன்றி!

  • http://pulse.yahoo.com/_QGEQJ6BRMWQOFO6AY2AKGC73ZM Mark killer

    அவர் யாருன்னு சொல்லவே இல்ல… அவர் லிங்க் தாங்க..

  • Anonymous

    அந்த பதிவை படிக்கும் பொழுது அதை சேமித்து வைக்கவேண்டும்…என்று தோன்றவில்லை….

  • Manithan82

    எனது பதிவையும் நீங்கள் சொன்னதுபோல அநேகர் படிக்கிறார்களெனத் தெரியும். ஆனால் பின்தொடரவில்லையென்கிற ஆதங்கமிருந்தது. இனியிருக்காது..(மண்டைக்கு உறைத்துவிட்டது)

  • Gsrmnm

    அன்பின் நண்பருக்கு நீங்கள் சொல்ல வந்த நபர் ஜிஎஸ்ஆர் ஆக இருக்கக்கூடும் என நினைக்கிறேன் காரணம் இந்த பதிவில் இருப்பவை அப்படியே அந்த பதிவில் ஒரு கருத்துரையாக வந்தது நான் தான் அந்த வலைத்தளத்தை எழுதிகொண்டிருக்கிறேன் பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் இருந்ததாலும் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியாத காரணத்தாலும் அந்த கருத்துரையை நீக்கியிருந்தேன்.

    மேலும் ஒரு பதிவிற்கு வாக்கு மற்றும் கருத்துரை என்பது வெறும் பிரபலம் என்பதற்காக இல்லை ஒரு பதிவை எழுதுகிறோம் அதில் பலரும் படிக்கிறார்கள் சிலர் மட்டுமே பதிவை பற்றிய கருத்துரையையோ அல்லது வாக்கோ அளிப்பார்கள் ஒரு பதிவு நிறைய வாக்குகள் வேண்டுமென்பதில்லை குறைந்தபட்சம் பிரபல பகுதிக்கு வந்துவிட்டால் அதன் மூலம் மேலும் அதிக நபரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது , வெறும் பத்து வாக்குகள் பெற்று 150 நபர்கள் படிப்பதை விட 25வாக்குகள் பெற்று பிரபல பகுதிக்கு வந்தால் அதை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 500ஆக இருக்கும் இதை அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன் மேலும் ஒரு வலைத்தளத்தை பின் தொடர்பவர்களை வைத்தோ அல்லது மின்னஞச்ல் வழி படிக்கும் நண்பர்களின் என்ணிக்கையை வைத்தோ அந்த பதிவு அதிக நபர்களை சென்றடையாது உதாரணத்துக்கு என் வலைத்தளத்தில் 300 மின்னஞ்சல் ரீடர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் படித்து ஆளுக்கு ஒரு வாக்கு அளித்தால் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

    இதை நீங்கள் வெளியிடவேண்டும் என்பதில்லை ஒரு சுய விளக்கம் மட்டுமே

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    http://gsr-gentle.blogspot.com

  • Anonymous

    நீங்கள் எழுதுவதை நிறுத்தப் போவதாக அறிவித்து விட்டு எழுதிக் கொண்டிருப்பதை வரவேற்கிறேன்… இந்த ஒரு செயலே நீங்கள் எழுதுவதை மிகவும் விரும்புகீறீர்கள் என்று தெரிகிறது…மற்ற விசயங்களை தயவு செய்து கவனிக்காதீர்கள்…அது தேவையில்லாத மன உளைச்சல் தான்…

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker