அயோத்தி….இலங்கை…காங்கிரஸ்…
இதை எழுத ஆரம்பிக்கும் போதே உள்ளுணர்வு கவனம் கவனம் என்று இருமுறை என் சிந்தனைகளை மிரட்டியது. எல்லா மதங்களும் கருணையை மட்டும் போதித்து மனிதர்களை மிருகங்களாய் மாற்றி வைத்துள்ளது இது எப்படி சாத்தியம்… மனிதர்கள் என்ன அன்னப்பறவையா கெட்டவைகளை ஒதுக்கி விட்டு நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்வதற்கு.
ஏதோ ஒரு பதிவில் படித்ததாக ஞாபகம் “ராமன் தன் மனைவி ஒருத்தியை காப்பாற்றுவதற்காக பல்லாயிரம் உயிர்களை களையெடுத்தான் எப்படி அவன் கடவுளின் அவதாரம் ஆவான்” என்று கேள்வி எழுப்பி இருந்தார் அந்த பதிவர். இது போன்று பல கருத்துகள் உலவினாலும் இவை எல்லாம் தனிப்பட்ட கருத்துக்களே. விவாதத்தினால் ஒரு உண்மையான கருத்தை பொய்யாகவோ இல்லை ஒரு பொய்யை உண்மையாகவோ மாற்ற முடியும்…அந்த சக்தி விவாதிப்பவரின் பேச்சு திறமையை பொறுத்து…ஆகையால் அயோத்தி விசயத்தை விவாதிப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை.
உதிரிகளாய் இருந்தாலும் நல்ல எதிர்கட்சிகளாய் இருந்த பல கட்சிகளை அழித்து பா.ஜா.க கட்சி உருவானது…இதே அயோத்தி பிரச்சனையை கையில் எடுத்து தான் அவர்கள் பூதகரமாக வளர்ந்தார்கள். இன்று என்றுமே இல்லாத அளவிற்கு இந்தியாவின் பலவீனமான எதிர்க்கட்சியாய் காலத்தை தள்ளிக் கொண்டுள்ளனர். அவர்கள் அன்று விதைத்த விஷ விதை இன்று சமூகத்தை விழுங்கும் ஆலமரமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
இறுதி தீர்ப்பு வந்து எவன் எவனை வெட்டினாலும் அதை விட கேவலமான செயல் உலகில் எதுவும் இருக்காது. திணிக்கப்பட்ட வன்முறையை அதுவும் மதத்திற்காக செய்கிறவன் முட்டாள் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
இராவணன் ஆண்ட இலங்கையும் ராமன் ஆண்ட அயோத்தியும் பற்றி எரிவதற்கு முதல் காரணம் மனித மனங்களில் ஒளிந்துள்ள ஆளுமை திமிரே…அதை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் செய்த தவறுக்கு இன்று அயோத்தி மக்கள் முகம் கொடுப்பது போல இன்று மிதிபடும் ஈழமக்கள் நாளை கிளர்ந்தெழும் போது இது போல் எத்தனையோ பிரச்சனை எழும் என்று எந்த சிங்களவனும் யோசிப்பது கிடையாது.
இந்தியாவின் மிக முக்கிய விஷயமான இந்த அயோத்தி பிரச்சனையில் பலனடைந்த பா.ஜ.க இறுதி தீர்ப்பை வைத்தும் ஏதேனும் பலனடைய முயற்சிக்கும் நேர்மையற்ற காங்கிரஸ் அரசாங்கம் வீணாக பொது மக்களை தான் வஞ்சிக்க போகிறது…
சிறுபான்மையினரை மதித்து அவர்களோடு சேர்ந்து நாட்டை உயர்த்தும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இந்த உலகில் தான் இருக்கிறது…அதன் வளர்ச்சியை பற்றி பேசுபவர்கள் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்வது கிடையாது.
அயோத்தி தீர்ப்பு…. காங்கிரஸ் அரசாங்கம் வைக்கும் பெரிய ஆப்பு இந்திய மக்களுக்கு…



