அ…ஆ…புரிந்துவிட்டது….

கற்றது கைமண் அளவு…

18 Oct

அ.தி.மு.க எழுந்திரு…விழித்திரு….

Posted in அரசியல் on 18.10.10

jayalalitha_karunanidhi

தமிழகம் கருணாநிதி குடும்பத்தின் இரும்பு பிடிக்குள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க எனும் எதிர்கட்சி சற்றும் அசராமல் காங்கிரசை தன் பக்கம் இழுத்து திமுகவை ஆட்டம் காண வைத்திருக்க வேண்டும் ஆனால் இவர்கள் செய்தது என்ன…நான்கு வருடம் அதிமுகவினருக்கு ஓய்வு கொடுத்து விட்டு இன்று தேர்தல் சமயத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய்களை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

பலமில்லாத எதிர்கட்சியின் ஆர்பாட்டங்களை எந்த பிரச்சனையையும் இல்லாமல் அறிக்கை மூலமே சமாளித்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக ஒட்டு வங்கியை பொறுத்தவரை திமுக அல்லது அதிமுகவை பின் தள்ளுவது என்பது நடவாத காரியம் ஆனால் வரிசையாக இருமுறை ஆட்சியை இழந்த கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்றில்லாமல் எல்லா தொண்டர்களுக்கும் ஓய்வு கொடுத்து விட்டு ஒரு பெரும்பான்மை இல்லாத கட்சி தமிழகத்தையே தன் குடும்ப பிடிக்குள் கொண்டு செல்லும் அளவிற்கு விட்டுவிட்டனர்.

திமுகவிற்கு அதிமுக சளைத்தவர்கள் இல்லை தான் ஆனால் ஒரு வலு இல்லாத எதிர்கட்சியினால் அரசாங்கத்தின் எதோச்சதிகாரம் எந்த அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு கருணாநிதியின் ஆட்சி ஒரு நல்ல உதாரணம்…

இன்றைய தமிழகத்தின் நிலை என்ன…கருணாநிதி குடும்பத்தினர்கள் மனது வைத்தால் தான் எந்த ஒரு விசயத்தையும் பார்கவோ,படிக்கவோ,கேட்கவோ முடியும் என்பதே நிஜம்….தேவையில்லாத பல செய்திகள் திணிக்கப்படுகின்றன… தேவையுள்ள பல விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. அரசியல்,பத்திரிகை,திரைப்படம்,கலாச்சார விழாக்கள் என்று அவர்கள் கரங்கள் நீளாத இடமே இல்லை எனலாம்.

அந்த காலத்தில் வாழ்ந்த அரசர்களுக்கு நிகராக கோலோச்சுகிறார் கருணாநிதி தன் குடும்ப பரிவாரங்களுடன்…இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க அதிமுக என்ற மாற்று கத்தியை விட வேறு வழி இல்லை நமக்கு…அதற்காவது அதிமுக…எழுந்திரு…விழித்திரு….


tags:

View Comments

blog comments powered by Disqus

My-Tamil Banner Exchange AdNetwork

Free PageRank Checker