கடந்த சில மாதங்கள் எந்திரன் செய்திகளில் கரைந்தது…தமிழர் இணையத்தில் இறைந்து கிடந்த பல செய்திகளில் எந்திரனே நிரம்பி வழிந்தது. நானும் அதை பற்றி ஒரு பதிவை எழுதினேன்…சலித்து விட்டது…மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நாம் நம் நினைவுகளை இழந்து மிதந்து கொண்டிருக்கிறோம்… சமீபத்தில் வந்த “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் வந்த பாடலை போல் (“தமிழர் காணும் துயரம் கண்டு…தலையை சுற்றும் கோளே அழாதே” ) தான் உள்ளது தமிழர்கள் நிலை. சாட்சி இல்லாமல் தமிழர்களை கொன்று குவித்தவனை ரத்தினக்கம்பளம் கொடுத்து வரவேற்று தமிழர்கள் தான் அனாதைகள் சிங்களவர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் திமிர்தனத்தை என்னவென்று சொல்வது.
ஒரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவனை அந்த நாட்டின் பிரதம மந்திரியே மரியாதை செய்து விருந்து கொடுப்பது எங்கும் காணாத அநியாயம்…தமிழனாய் இருந்தால் இதையும் நாம் கண்டு கொள்ளக்கூடாது.

இவர்களுக்கு என்ன பாவம் செய்தார்கள் தமிழர்கள்…ஏன் இப்படி சிறுமைபடுத்துகின்றனர் கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை அது.
ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த அசினுக்கு எதிராக பல இயக்கங்கள் களம் இறங்கின…அவருக்கு பாதுகாப்பை கொடுத்து பூ போல காப்பற்றி அனுப்பி வைத்தார் நமது இளைய தளபதி…இனி மும்பையில் இருந்து அறிக்கைகள் பறக்கும் தமிழனாய் இருந்தால் இதையும் நாம் கண்டு கொள்ளக்கூடாது…
எனக்கு ஒன்று புரியவில்லை… சுப்ரமணிய சுவாமி என்கின்ற ஒரு அரசியல்வாதி அவருக்கு என்ன பிரச்னை… அந்த அரசியல்வாதியால் தமிழகத்திற்கோ அல்லது தமிழர்களுக்கோ எந்த ஒரு நன்மையையும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை. மதுரையில் இட்லிக் கடையை திறந்ததை வேண்டுமானால் பெரிய நன்மையாக அந்த கடைக்காரர் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பக்கம் இலங்கை அரசு விடுதலைபுலிகள் அழிந்துவிட்டனர் என்கிறது இந்த அரசியல்வாதியோ முண்டாவை தட்டுகிறார் விடுதலைப்புலிகளின் மீதான தடையை விலக்குவதற்கு. அவரும் மற்றும் அவர் நண்பர்களான ஹிந்து ராம்,துக்ளக் சோ,கருணாநிதி,தமிழ்நாடு காங்கிரஸ் அல்லக்கைகள் நினைத்தது போல் விடுதலைப்புலிகள் அழிந்து பல லட்சம் தமிழர்கள் மண்டுவிட்டனர்…ஆனால் இந்த இரக்கமற்ற ஜென்மங்களுக்கு மட்டும் இன்னும் என்ன வேண்டும் என்று தெரியவில்லை.


