தல…இந்தியாவில நம்மள அடிச்சுக்க யாரும் இல்ல…

Tamilnadu Government free bee Television

வணக்கம் தமிழகம்…

சும்மா சொல்லகூடாது…இடியட் பாக்ஸ்னு ஒரு பேரு இருக்கு டி.விக்கு அத விழுந்து விழுந்து பாக்குறதுல நாம தான் இந்தியாவிலேயே ரெண்டவது. நாம எல்லா டி.வியும் பார்போம்….ஒரு சேனல் குறையில்ல….ஆனா பாக்குறது மட்டும் பொழுதுபோக்கா இருக்கனும். எதாவது விஷயம் இருக்குற நிகழ்ச்சிய பார்த்தா அது பெரிய குற்றம்…சேனல்காரனுங்க பார்த்தானுங்க…உலகமே ஒப்பாரி வைச்சப்ப(அதாங்க இலங்கை மேட்டரு…நமக்கு எதுக்கு அதெல்லாம்…) T.R.P ரேட்டிங்கல நம்ம மானட மயிலாட தான் டாப்பு.

இவ்வளவு சொல்றேன்….நான் மட்டும் யோக்கியமா…நிச்சயம் இல்லை…அட நம்மள திருந்த விட்டாத்தானே…கொஞ்சமாவது யோசிக்கிற அளவு எந்த நிகழ்ச்சியும் இப்ப இல்லை…அப்படி போட்டாலும் அது பிரைம் டைம்ல இருக்காது…

ஒன்னு மட்டும் புரியுது…நமக்கு காட்டபடுறத மட்டுமே பாக்க பழகிட்டோம்… அதை தாண்டி நாம கேக்குறதும் இல்ல அவங்களா நல்ல நிகழ்ச்சிகளை போடுறதும் இல்ல….

ஆனாலும் நம்ம முயற்சிய விடாம அடுத்த இடத்த பிடிப்போம்……அதாங்க No.1…….முதல்ல இந்திய…அப்பறம் உலகத்துல…

என்ன பாஸ் கொஞ்சம் சிரிங்க….சீரியஸ் ஆய்டாதீங்க…

இதாங்க செய்தி….

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மூலம் தமிழ்நாட்டில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி 2010-ம் ஆண்டு நடந்தது. 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதில் ஈடுபட்டனர். வீடு கணக்கெடுப்பு பட்டியலை தமிழ்நாட்டு திட்டக்குழு துணைத் தலைவர் சாந்த ஷீலா நாயர் இன்று வெளியிட்டார்.

பின்னர் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நிரு பர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் குடும்பங்களின் எண்ணிக்கை 1.42 கோடியில் இருந்து 1.85 கோடியாக அதிகரித்துள்ளது. 94 சதவீத குடும்பங்கள் ஆழ்துழை கிணறுகள், குழாய் இணைப்புகள், மூடிய கிணறு ஆகியவற்றின் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். தற்போது 93 சதவீத குடும்பங்களில் மின்சார வசதி உள்ளது. 7 சதவீத வீடுகளில் மின் இணைப்பு இல்லை.

2001-ம் ஆண்டு 75 சதவீத குடும்பங்களுக்கு மின் இணைப்பு இருந்தது. இப்போது 93 சதவீதமாக அதிகரித்துள்ளது. 64 சதவீத குடும்பங்களில் வீட்டுக்குள் குளிக்கும் வசதி உள்ளது. 52 சதவீத குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறார்கள். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 44 சதவீத வீடுகளில் டி.வி. இருந்தது. தற்போது 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் டெல்லியில் 92 சதவீதம் பேர் டி.வி. பயன்படுத்துகிறார்கள்.

தமிழ்நாடு டி.வி. பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 2-வது இடம் பிடித்துள்ளது. 11 சதவீத வீடுகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. 48 சதவீத வீடுகளில் சமையல் கியாஸ் பயன்படுத்துகிறார்கள். 32 சதவீதம் பேர் இரண்டு சக்கர வாகனங்களையும், 4 சதவீதம் பேர் 4 சக்கர வாகனங்களையும் பயன்படுத்துகிறார்கள். 45 சதவீதம் பேர் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள். 26 சதவீதம் பேர் கூரை வீடுகளில் இருந்தனர். தற்போது அது 15 சதவீதமாக குறைந்துள்ளது. முன்பு 33 சதவீத வீடுகள் மண் சுவர்களால் கட்டப்பட்டிருந்தன. அது 25 சதவீதமாக குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது ரொம்ப லேட்டு… வெற்றி தமிழருக்கு தோல்வியே!!!

jayalalitha_karunanidhi

ரொம்ப (எழுதப்பட்ட தேதியை வைத்து)பழைய பதிவு….இது தாங்க சோம்பேரித்தனம்….ஆனா விஷயம் இன்னைக்கு எழுதின மாதிரி தான் இருக்குது…

ஒரு வழியாய் தமிழக தேர்தல் முடிந்தது…மிச்சமிருப்பது அரசியல்வாதிகளின் வெற்றியே…கூட்டணி அமைந்த போதே தமிழர்களின் தோல்வி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. கருணாநிதியும்,ஜெயலலிதாவும் மாறி மாறிக்  கொள்ளையடிக்கும் வங்கியாகி போனது தமிழ்நாடு…மீனவனை காப்பாற்ற துப்பில்லை…தடையில்லா மின்சாரம் கொடுக்க துப்பில்லை…விலைவாசியை கட்டுபடுத்த துப்பில்லை… ஆனால் கழக ஆட்சி மட்டும் மீண்டும் மீண்டும் வேண்டும்.

பயங்கரவாதிகள் என்ற பெயரால் இலங்கையில் கொலைசெய்யப்பட்ட பல லட்சம் தமிழர்கள்…மனித உரிமை கொடி தூக்கும் ஐக்கிய நாட்டு சபையின் குள்ளநரித்தனம் அதன் நிபுணர் குழு அறிக்கையில் பட்டவர்த்தனமாகிவிட்டது. கொலைகாரன் கையிலே புலன்விசாரணை…என்ன ஒரு அநியாயம்… கோடி தமிழனை விட கோடி சிங்களவனை தூக்கி பிடிக்கும் இந்திய ராசதந்திரம்…அதில் அடங்கிய கருணாநிதியின் தமிழின உணர்வு… கொள்ளைக்காரனும்,கொள்ளைக்ககாரியும் அடுத்தடுத்து ஆட்சிக்கு வர தமிழன் ஒரு முட்டாளோ என்கின்ற நிலை தான் மேலெழுகிறது.

ரொம்ப ஆவேசமா எழுத ஆரம்பித்த பதிவு….இப்படி மொக்கையாய் போய்டுச்சு….என்ன செய்வது…

எந்திரன் என்ன ஆச்சு – ரஜினி விசாரணை…

March 20, 2012 by · Leave a Comment
Filed under: கவிதை 

முன்பெல்லாம் பத்து தியேட்டர்ல படங்கள் ரிலீஸ் ஆகும். அது நூறு நாட்கள் ஓடும். இப்போது நூறு தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகுது. அதனால் பத்து நாட்கள்தான் ஓடுது. இரண்டும் ஒன்றுதான் என்கிறார் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் ஆடுகளம் படத்தின் இயக்குனர்.

இந்த அதிக தியேட்டர் குழப்பத்தில் நம்ம படம் ஹிட்டா? பிளாப்பா? என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆணானப்பட்ட ரஜினிக்கே அந்த குழப்பம் வந்திருப்பதுதான் ஆச்சர்யம். தமிழ்சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று புகழப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு சில தினங்களுக்கு முன் போன் அடித்தாராம் சூப்பர் ஸ்டார். எந்திரன் படம்

எந்திரன் என்ன ஆச்சு – ரஜினி விசாரணை…